தெப்பக்குளம் நிறைந்து கரைப்பகுதி விரிசலால் சாலையில் போக்குவரத்து ஒரு வழிசாலையாக மாற்றம்

18 November 2021

*குரும்பலூர் தெப்பக்குளம் நிறைந்து கரைப்பகுதி விரிசலால் பெரம்பலூர் துறையூர் சாலையில் போக்குவரத்து ஒரு வழிசாலையாக மாற்றம்

   பெரம்பலூரில் தொடர் மழையால் குரும்பலூர் பேரூராட்சி கூட்டுறவு வங்கி அருகில் உள்ள தெப்பக்குளம் நிறைந்து வழிகிறது. கரைப்பகுதி விரிசலால் மண் சரிவு ஏற்பட்டு பெரம்பலூர் துறையூர் சாலையில் உடையும் அபாயம் . தகவலறிந்து வந்த பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீ வெங்கடபிரயா துறையூர் சாலையில் போக்குவரத்தினை கட்டுபடுத்தும் விதமாக ஒரு வழி சாலையாக மாற்றி மணல் மூட்டைகள் வைத்தும் தடுப்பு தட்டிகள் கட்டியும் பாதுகாப்பு நடவடிக்கையாக மேற்கொண்டுள்ளார்,இந்த நிகழ்வின் போது பெரம்பலூர் வட்டாட்சியர், கோட்டாட்சியர்,நெடுஞ்சாலைதுறை உதவி இயக்குநர்,வருவாய் ஆய்வாளர், காவல்துறையினர்,குரும்பலூர் கிராம நிர்வாக அலுவலர்கள், பேரூராட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.மழை தொடர்ந்து பொழிந்தால் மண் ஈரப்பதம் அதிகரித்து கரை மேலும் விரிசல் உடையும் அபாயம் உள்ளது.