முகப்பு எடப்பாடி பழனிச்சாமி அவர்களை மீண்டும் முதலமைச்சராக அமர்த்துகின்ற தேர்தல் இந்த தேர்தல் -ஆர் பி உதயகுமார்
மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதியில் உள்ள டி.குண்ணத்தூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் குடும்பத்துடன் வந்து வாக்களித்தார்.
இதன்பின் வருவாய் துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அமைதி வளம் வளர்ச்சி எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும் .இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும் என்ற தாரக மந்திரத்துடன் அதிமுக ஆட்சி செய்தது. தனக்கு பின்பும் நூறு ஆண்டுகள் அதிமுக அரசு சேவை செய்யும் என்ற அம்மாவின் கூற்றுப் படியும் ஜாதி சண்டை மதச் சண்டை ஊர் சண்டை என இல்லாமல் அமைதிப் பூங்காவாக மாற்றிய அண்ணன் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் ஆட்சி தொடர்வதற்காக இந்த தேர்தல் நடைபெற்று வருகிறது.
தடையில்லா மின்சாரம் வழங்கிய ஆட்சி வளர்ச்சிப் பணிகளை பல்வேறு தடைகளை தாண்டி செய்திட்ட அரசு அதிமுக அரசு ஆகும். தற்போது விவசாயத்தில், நீர் மேலாண்மையில், நிர்வாகத் திறமையில், முதல் இடம் பெற்றுள்ள அண்ணன் எடப்பாடி அவர்களின் ஆட்சி எல்லாரும் விரும்புகின்ற இந்திய தேர்தல் அமைப்பில் ஒரு சாதாரண சாமானியன் முதலமைச்சராக வரவேண்டும், என்பதற்காக மக்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ள எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் மீண்டும் மக்கள் சேவையாற்றிட பொன்னான வாய்ப்பை இந்த தேர்தல் தரும் என எங்களுக்கு நம்பிக்கை உள்ளது .
அதிமுக அமோக வெற்றி பெறும் என வருவாய்த் துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார் தெரிவித்தார்.