திருடப்பட்ட செல்போன்களை மீட்டு திருவாரூர் காவல்துறை அதிரடி!

23 July 2021


களவு மற்றும் காணாமல் போன  ரூ.5.5 லட்சம் மதிப்பிலான 50 ஆன்ராய்டு வகை செல் போன்கள் திருவாரூர் மாவட்ட காவல் துறை சார்பில்
உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. 


திருவாரூர் மாவட்டத்தில் பொதுமக்களின் கைபேசி களவுபோனது மற்றும் காணாமல் போனது தொடர்பாக 2020 மற்றும் 2021ம் வருடத்தில் காவல் நிலைங்களில் பெறப்பட்ட புகார்கள் மற்றும் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் பெறப்பட்ட புகார் மனுக்கள் தொடர்பாக மனு ரசீது பதிவு செய்து
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசன்  உத்தரவின்பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது. 

அதனடிப்படையில் தனிப்படையினர் கைப்பேசிகளை விரைந்து கண்டுபிடிக்க சைபர் கிரைம் காவல் நிலையத்தின் மூலம் அதிரடி விசாரணை செய்து காணாமல் போன ரூ 5.5 லட்சம் மதிப்புள்ள 50 ஆன்ராய்டு வகை கைப்பேசிகளை மீட்டு சட்டபூர்வ நடவடிக்கை மேற்கொண்டனர்.

இந்நிலையில் திருவாரூர் 
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் சம்மந்தப்பட்ட கைபேசி உரிமையாளர்களை மாவட்ட காவல் அலுவலகத்திற்கு நேரில் அழைத்து அவர்களிடம் கைப்பேசிகளை ஒப்படைத்தார். 

திருவாரூர் மாவட்டத்தில் நடப்பு 2020/2021-ம் ஆண்டில் கைப்பேசிகள் காணாமல் போனது தொடர்பான புகார் மனுக்களில் துரித விசாரணை நடத்தி 
50 செல்போன்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது
எனவும், மீதம் உள்ள புகார் மனுக்கள் மீது
தனிப்படையினர்  சைபர் கிரைம் காவல் நிலையம் மூலம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் எனவும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தெரிவித்தார்.சிறப்பாக பணிபுரிந்த தனிப்படையினர் மற்றும் சைபர் கிரைம் காவல் அதிகாரிகள் மற்றும் அலுவலர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டி வெகுமதி வழங்கினார்.

கி.இரவி
திருவாரூர் மாவட்ட செய்தியாளர்.