திருவாரூர்: தகராறில் 6 பேர்மீது வழக்கு

16 September 2021



திருவாரூர் அருகே முன்விரோதத்தில் தகராறு செய்து 2 பேர் தாக்குதல் சம்பவத்தில்  6 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

       திருவாரூர் அருகை உள்ள  அம்மையப்பன் தைக்கால் தெருவைச் சேர்ந்தவர் சிலம்பரசன் (வயது 30). சேந்தமங்கலத்தை சேர்ந்தவர் சங்கர். இவர்களிடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து சிலம்பரசன், தனது வீட்டை பழுது நீக்குவதற்கான பணிகளை தொடங்கியுள்ளார். இதனையறிந்த சங்கர், ஏன் வீட்டை பிரித்துள்ளாய்? என சிலம்பரசனிடம் கேட்டதையடுத்து   இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த சங்கர் தனது நண்பர்களோடு சேர்ந்து சிலம்பரசனையும், அவரது அண்ணன் கார்த்திகேயனையும் தாக்கியதாக கூறப்படுகிறது. 

இதில் காயம் அடைந்த 2 பேரும் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். இதுகுறித்து   சிலம்பரசன் தன்னை தாக்கியவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என திருவாரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இதனையடுத்து  சங்கர், அவரது சகோதரர் அருள், நண்பர்கள் விஷால், ஆதி, கவின்பாலா, ஆகாஷ் ஆகிய 6 பேர் மீதும்  உதவி காவல் ஆய்வாளர் ராஜாராமன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

*நிருபர் மீனா திருவாரூர்*