வீட்டு மேற்கூரை இடிந்து விழுந்தது பெண் தொழிலாளர் பலி

12 October 2021


திருவாரூர் அருகே வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து மூதாட்டி சாவு

திருவாரூர் அருகே உள்ள கொடிக்கால்பாளையத்தில் ல் வசிப்பவர் முகம்மது இக்பால் . இவரது வீட்டில் பிலாவடிமூளை பகதியைச்சேர்ந்த கூலித் தொழிலாளியான  கிளியம்மாள் (வயது65). என்பவர் வீட்டு வேலை செய்து வந்தார். இவருக்கு கூலிவேலை செய்து வரும் ஒரு மகன் உள்ளார்.

இந்த நிலையில் திங்கட்கிழமை  காலை வழக்கம் போல் முகமது இக்பால்  வீட்டுக்கு வேலை செய்வதற்காக கிளியம்மாள் சென்றுள்ளார். அப்போது வீட்டின் அழைப்பு மணியை அடித்து விட்டு வாசலில் காத்திருந்தபோது திடீரென வீட்டின் முன்பக்க மேற்கூரை  இடிந்து கிளியம்மாள் மீது விழுந்தது. இதில் இடிபாடுகளுக்குள் கிளியம்மாள் சிக்கிக்  கொண்டார். சத்தம் கேட்டு ஓடி வந்த முகமது இக்பால் குடும்பத்தினர் 108 ஆம்புலன்சுக்கும், காவல் நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர்.

தகவலின் பேரில் அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்த்தனர். அப்போது இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த கிளியம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது தெரியவந்தது. இதனையடுத்து திருவாரூர்  நகர போலீசார் கிளியம்மாளின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 
இதுகுறித்து திருவாரூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வீட்டின் முன்பக்க மேற்கூரை இடிந்து விழுந்து மூதாட்டி பலியான சம்பவத்தால் அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

*நிருபர் மீனா திருவாரூர்*