வேலைக்குச் சென்ற இளம்பெண் மாயம் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார்

12 October 2021

வேலைக்குச் சென்ற இளம்பெண் மாயம் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வெட்டூர்ணிமடம் கிறிஸ்து நகர் ராயப்பன் தெருவை சேர்ந்தவர் ஸ்டீபன். இவரது மகள் 23 வயதான சைஜி. ராமன் புதூரில் உள்ள மெடிக்கல் ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த ஐந்தாம் தேதி மெடிக்கலுக்கு செல்வதாக கூறிச்சென்ற சைஜி, அதன் பின்னர் வீடு திரும்பவில்லை . இதுகுறித்து அவரது தாய் ஹெப்சிபாய் புகாரின் பேரில் வடசேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்


நாகர்கோவில்
Siva