முப்பது வெட்டி ஸ்ரீ வாராஹி அம்மன் ஆலயத்தில் பஞ்சமி திதியை முன்னிட்டு சிறப்பு அலங்காரம்

01 April 2024

முப்பது வெட்டி ஸ்ரீ வாராஹி அம்மன் ஆலயத்தில் பஞ்சமி திதியை முன்னிட்டு சிறப்பு அலங்காரம்


ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த முப்பது வெட்டி பகுதியில் கிராமத்தில் எழுந்தருளி அருள் பாலித் வரும் அருள்மிகு ஸ்ரீ வாராஹி அம்மன் ஆலயத்தில் பஞ்சமி திதியை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அருள் பாலித்தார்.  முன்னதாக அம்மனுக்கு வாசனை திரவியங்கள் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது.  பூக்களால் அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீ வாராஹி அம்மனுக்கு ஸ்தாபகர் தேவா அவர்களால் சிறப்பு ஆராதனை நடைபெற்றது.  இதில் பக்தர்கள் வாழை இலை போட்டு பச்சரிசி பரப்பி தேங்காய் உடைத்து தேங்காய்க்கு மஞ்சள் குங்குமம் திலகமிட்டு திரி போட்டு விளக்கேற்றி தங்கள் வேண்டுதலை நிறைவேற்றினர்.  இதில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பொதுமக்கள் என திரளானோர் கலந்து கொண்டனர்.  இறுதியில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டு நிகழ்ச்சி நிறைவு பெற்றது.
ஆற்காடு செய்தியாளர் S.கணபதி