சிறப்பு இரத்த தானம் முகாம்

29 October 2020

வந்தவாசி ஆர்.சி.எம் உயர் நிலைப் பள்ளி மற்றும் இந்தியன் ரெட் கிராஸ் சங்கம் வந்தவாசி வட்ட கிளை இணைந்து நடத்திய சிறப்பு இரத்ததான முகாம் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் வந்தவாசி ஆர்.சி.எம் பள்ளி தலைமை ஆசிரியர் வி.எல். ராஜன் வரவேற்றார். மாவட்ட ரெட் கிராஸ் சங்க தலைவர் பா. இந்திரராஜன் தலைமை வகித்தார். பள்ளி தாளாளர் பேரருட்பணி டி. பன்னீர்செல்வம், ரெட் கிராஸ் சங்க துணைத் தலைவர் இரா. சரவணன், பொருளர் அ. விஜயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக, வந்தவாசி வட்டாட்சியர் கே.ஆர். நரேந்திரன் பங்கேற்று, இரத்ததானம் பற்றிய தகவல்களை விளக்கி பேசினார். மேலும் இரத்த கொடையாளர்களுக்கு சான்றிதழ் வழங்கினார். செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர்கள் குழு முகாமில் பங்கேற்றனர். மேலும் இந்த நிகழ்வில் ரெட் கிராஸ் சங்க நிர்வாகிகள் சீ. கேசவராஜ், கு. சதானந்தம், எ. தேவா, மு. பிரபாகரன், எம்.பி. வெங்கடேசன் உள்ளிட்ட உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். வந்தவாசி துணை பிடிஓ பாண்டியன், ஊராட்சி மன்றத் தலைவர்களும் பங்கேற்றனர். இறுதியில் ரெட் கிராஸ் சங்க செயலாளர் பா. சீனிவாசன் நன்றி கூறினார்.