மரக்கன்றுகள் நடும் நிகழ்வு...

30 October 2020

வந்தவாசி எக்ஸ்னோரா வட்ட கிளை சார்பாக வெண்குன்றம் பக்ரி தர்காவில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக, திருவண்ணாமலை மாவட்ட எக்ஸ்னோரா தலைவர் பா. இந்திரரராஜன் பங்கேற்று, மரக்கன்றுகளை நட்டு வைத்து, உறுதிமொழி எடுத்துக் கூறினார்.

மேலும் இந்த நிகழ்ச்சியில் வந்தவாசி துணை பிடிஓ பாண்டியன், செயலாளர் கு. சதானந்தன், துணைத் தலைவர் பா. சீனிவாசன், பொருளாளர் சீ. கேசவராஜ், துணைச் செயலாளர் மொ. ஷாஜகான், துணை பொருளாளர் அ. சுந்தர் தாஸ், குழு உறுப்பினர் ல. செல்வராஜ் இயக்குநர்கள் கே. வாசு, மு. பிரபாகரன், எம்.பி. வெங்கடேசன், பி. ராமு ஆகியோர் பங்கேற்றனர். இறுதியாக நிகழ்வு ஒருங்கிணைத்த இயக்குநர் சையத் நாசர் நன்றி கூறினார்.