முகப்பு விரைவில் நிர்வாகிகளை சந்தித்து புதிய கட்சி தொடங்குவது குறித்து ஆலோசனை நடத்துவேன் மு.க.அழகிரி பேட்டி.
மதுரை வில்லாபுரம் பகுதியில் அண்மையில் உடல்நலக்குறைவால் உயிரிழந்த திமுக நிர்வாகி எஸ்.ஆர்.மருதுவின் வீட்டிற்கு சென்று அவருடைய உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்திய முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது :
வரும் 2021சட்டமன்ற தேர்தலில் எனது பங்களிப்பு இருக்கும் எனவும், புதிய கட்சி தொடங்குவது குறித்த கேள்விக்கு விரைவில் நிர்வாகிகளை ஆலோசித்து எனது முடிவை அறிவிப்பேன் , போக போக எனது முடிவு தெரியும் எனவும், தயாநிதிக்கு திமுகவில் முக்கியத்துவம் அளிக்கப்படவுள்ளதாக வரும் தகவல் குறித்த கேள்விக்கு அமித்ஷாவை நான் சந்திக்க போவதாக கூறிய வதந்தி போல தான் அந்த செய்தியும் என்றார்.