தமிழகத்தில் இதுவரை 41 லட்சம் பேர் கொரோனா தடுப்பூசி போட்டுள்ளனர்

14 April 2021

தமிழகத்தில் 79-வது நாளாக நேற்று 4,196 மையங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடந்தது. இதில் நேற்று ஒரே நாளில் மட்டும் 1 லட்சத்து 55 ஆயிரத்து 325 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். 

அந்தவகையில் நேற்று இணை நோயுடன் உள்ள 45 வயதுக்கு மேற்பட்ட 87 ஆயிரத்து 466 பேருக்கும், 60 வயதுக்கு மேற்பட்ட 56 ஆயிரத்து 584 முதியவர்களுக்கும், சுகாதாரப் பணியாளர்கள் 4 ஆயிரத்து 375 பேருக்கும், முன்கள பணியாளர்கள் 6 ஆயிரத்து 900 பேருக்கும் நேற்று கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. தமிழகத்தில் இதுவரை 40 லட்சத்து 99 ஆயிரத்து 330 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர்.