மீண்டும் ஊரடங்கு வர வாய்ப்பு: தகவல் என்ன?

14 April 2021

தமிழகத்தில் கடந்த ஆண்டு ஏற்பட்ட கொரோனா பாதிப்பின் தாக்கத்தை விட இந்த ஆண்டு கொரோனாவின் தாக்கம் மிகவும் கடுமையாக உள்ளது. கடந்த ஆண்டு சென்னையின் உச்சபட்ச பாதிப்பு எண்ணிக்கையான 2,100 என்ற அளவு, இந்த ஆண்டில் தற்போதே கடந்து விட்டது. அடுத்து வரும் சில நாட்களில் சென்னை மட்டுமின்றி தமிழகத்திலும் கொரோனாவின் தாக்கம் அதிகரிக்கும் எனவும் மருத்துவர்கள் கணித்துள்ளனர். இதுபோன்ற சூழலில் முழுமையான ஊரடங்கு அமல்படுத்துவது சிறந்த பலனைத் தராது என்கிறார் மருத்துவர் அஷ்வின். முழு ஊரடங்கின் காரணமாக சில நாட்களில் பாதிப்பு குறைந்தது போல் தோன்றினாலும், ஊரடங்கு தளர்வுக்குப் பிறகு மீண்டும் தொற்று பாதிப்பு அதிகரிக்கும் எனவும் கூறுகிறார்.