விழுப்புரத்தில் பரபரப்பு: சிறுமிக்கு நேர்ந்த கொடுமை

24 July 2021


விழுப்புரம் சிறுமியிடம் தவறாக நடந்த கல்லுாரி மாணவர் போக்சோவில் கைது செய்யப்பட்டார். விழுப்புரம் கீழ்பெரும்பாக்கத்தைச் சேர்ந்தவர் சேகர் மகன் சஞ்சீவிகுமார், 20; விழுப்புரம் அரசு கலைக்கல்லுாரியில் மூன்றாம் ஆண்டு ஆங்கிலம் படித்து வருகிறார். இவரும், மாசிலாமணிபேட்டையை சேர்ந்த பிளஸ் 2 படிக்கும் 17 வயது சிறுமியும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். அப்போது, சிறுமியிடம் சஞ்சீவிகுமார் தவறாக நடந்து கொண்டுள்ளார். இது குறித்த புகாரின்பேரில், விழுப்புரம் மகளிர் போலீசார் வழக்குப் பதிந்து சஞ்சீவிகுமாரை, போக்சோவில் கைது செய்தனர். 


செய்தியாளர்
செஞ்சி அர்பத்