கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் சட்ட விரோதமாக குட்கா‌ விற்பனை‌ செய்து வந்த இரண்டு கடைகள் மூடி முத்திரையிடபட்டது

24 July 2021


கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல்ஹக் உத்தரவின் பேரில், சங்கராபுரம் காவல் ஆய்வாளர் பாலகிருஷ்ணன் , உதவி ஆய்வாளர் திருமால் மற்றும் காவலர்கள் அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா, புகையிலை பொருட்கள் கடைகளில் விற்பனை செய்யப்படுகிறதா என ஆய்வு செய்தனர். இதில் புதுப்பாலப்பட்டு கிராமத்தை சேர்ந்த கனகசபை மகன் சுபாஷ், சங்கராபுரம் பேரூராட்சி பகுதியை சேர்ந்த வெங்கடேசன் மகன் ஆகிய இருவரும் தங்களது கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட குட்காவினை விற்பனைக்காக வைத்திருந்தது தெரிந்தது. தொடர்ந்து திருக்கோவிலுார் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் மற்றும் சங்கராபுரம் வட்டாட்சியர் தலைமையில் 2 கடைகளுக்கும் மூடி முத்திரை வைக்கப்பட்டது. மேலும் 21 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.

செய்தியாளர்..
K.ஏழுமலை.
கள்ளக்குறிச்சி