நாம் தமிழர் கட்சி நிர்வாகி இல்ல விழாவில் கலந்து கொண்ட சீமான்

14 November 2021

*மேலூரில், நாம் தமிழர் கட்சி நிர்வாகி இல்ல விழாவில் கலந்து கொண்ட சீமான், அவருடன் ஆர்வமாக புகைப்படம் எடுத்துக் கொண்ட இளைஞர்கள் மற்றும் பெண்கள்*

மதுரை மாவட்டம் மேலூரில், நாம் தமிழர் கட்சியின் ஆதரவாளராகிய அரவிந்தன் இல்ல நிகழ்ச்சி சிவகங்கை சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில்  நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்ட நிலையில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 

இதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சீமானுடன் கட்சி நிர்வாகிகள் இளைஞர்கள் மற்றும் பெண்கள் ஆர்வமுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். 

இநிகழ்ச்சியின் போது, கட்சியின் செயலாளர் தடா.சந்திரசேகர்.  மண்டல ஒருங்கிணைப்பாளர் கோட்டைகுமார், மாவட்ட நிர்வாகி வெற்றிக்குமரன் ராஜேந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.