மழையால் வீடு சேதம் அடைந்தவர்களுக்கு நிதியுதவி வழங்கல்
14 November 2021
மழையால் வீடு சேதம் அடைந்தவர்களுக்கு நிதியுதவி வழங்கல்
நவம்பர்-14, பேராவூரணி மற்றும் சேதுபாவாசத்திரம் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில், வீடுகள் சேதம் அடைந்த 20 நபர்களுக்கு பேராவூரணி தாலுக்கா அலுவலகத்தில் நிதி உதவி வழங்கப்பட்டது. மழையினால் பாதிக்கப்பட்ட வீடுகளை ஆய்வு செய்து, அந்தந்த கிராம நிர்வாக அலுவலர்கள் தந்த அறிக்கையின் அடிப்படையில், சேதமடைந்த ஓடு மற்றும் குடிசை வீடுகளின் உரிமையாளர்கள் 20 பேர் தேர்வு செய்யப்பட்டு, ஓட்டு வீட்டிற்கு 5,100ம் குடிசை வீட்டிற்கு 4,200ம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் அசோக்குமார் தலைமை வகித்து, நிதி உதவி வழங்கினார். நிகழ்ச்சியில் தாசில்தார் சுகுமார், துணை தாசில்தார் கவிதா, திமுக இலக்கிய அணிச் செயலாளர் ஆனந்தராஜ், தலைமை கழக பேச்சாளர் அப்துல் மஜீத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.