முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டிய தேவர் புகைப்படம் மும்பையில் திறப்பு விழா நடைபெற்றது !

17 June 2022

முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டிய தேவர் புகைப்படம் மும்பையில் திறப்பு விழா நடைபெற்றது !

மராட்டிய மண்ணின் தலைநகரான மும்பையில் 
வரலாற்றில் முதன்முறையாக தமிழினத்தின் பாண்டிய பெரும்தேசத்தின் பேரரசர்,
மகா ராசாதி ராச
ஸ்ரீபரமேசுவரன், 
எல்லாம் தலையானான் பெருமாள், கச்சி வழங்கும் பெருமாள், கோதாண்டராமன், எம் மண்டலமும் கொண்டருளிய முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியத்தேவர் அவர்களின் திருவுருவ புகைப்படம் வெளியிடும் நிகழ்வு நடைபெற்றது.

பாண்டியர்கள் தேடி பயணம்
(பாண்டியர்கள் வரலாற்று ஆய்வுக் குழு) சார்பாக வரையப்பட்ட பாண்டிய பெரும் தேசத்தின் பேரரசர்
முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியத்தேவர் அவர்களின் திருவுருவ புகைப்படம் மும்பையில் வசிக்கக் கூடிய  தேவர் சமுதாய மக்களால் வெளியிடப்பட்டது.

தாராவி தென்னிந்திய முக்குலத்தோர் மகாஜன சங்கம், மராட்டிய மாநில தேவர் முன்னேற்றப் பேரவை,  உலக முக்குலத்தோர் அமைப்பு (மும்பை), மூவேந்தர் கூட்டமைப்பு (மும்பை) உடன் இருந்தனர்.