வந்தவாசியில் ஸ்ரீ ராமானுஜர் ஜெயந்தி விழா.

18 April 2021



வந்தவாசி ஸ்ரீ ரங்கநாயகி தாயார் சமேத ஸ்ரீ ரங்கநாதப் பெருமாள் கோவிலில் இன்று ஸ்ரீ ராமானுஜரின் 1004 ஆவது ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. ஸ்ரீ ராமானுஜருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. மேலும் பாகவத கோஷ்டியினர் நாலாயிர திவ்வியப் பிரபந்த பாடல்களை பாடினர். மேலும் பெருமாள் அருகில் ராமானுஜர் எழுந்தருளி சேவை சாதித்தார். பிறகு  சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ராமானுஜரை வழிபட்டனர்.