தமிழகத்திற்கு அடுத்த 48 மணி நேரத்திற்கு மழை எச்சரிக்கை!!

21 July 2021


தென்மேற்குப் பருவக் காற்றால் தமிழ்நாட்டில் பெரும்பாலான மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல்.


தமிழ்நாட்டில் அடுத்த 48 மணி நேரத்தில் நீலகிரி கோவை, திண்டுக்கல், தென்காசியில் மழை பெய்யக்கூடும். சென்னை உள்பட வடகடலோர மாவட்டங்கள் வேலூர் திருப்பத்தூர், ராணிப்பேட்டையில் மிதமான மழைக்கு வாய்ப்பு.

கிருஷ்ணகிரி, சேலம் மாவட்டத்திலும் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் மழை பெய்யக்கூடும் என்று ஆய்வு மையம் எச்சரிக்கை.

 நாளை: நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், தேனி திண்டுக்கல், தென்காசி குமரி மாவட்டங்களில் ஓரிரு நாட்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு.

 ஜூலை 24, 25ல் நீலகிரி, கோவையில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கனமழை பெய்யக்கூடும்.