கடந்த 4 மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை - மருத்துவர்கள் போராட்டம்!!

23 October 2020

இந்தியா முழுமைக்கும் கொரோனா பாதிப்புகள் பெரிய அளவில் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்ற சூழலில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பணியில்  மருத்துவர்கள், செவிலியர்கள், காவலர்கள், துப்பரவு தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், நாட்டின் தலைநகர் டெல்லியில் உள்ள இந்து ராவ் மற்றும் கஸ்தூரிபாய் ஆகிய மருத்துவமனையில் பணியாற்றி வரும் மருத்துவர்கள் தற்போது தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு உள்ளனர். 

அவர்கள் முக கவசங்களை அணிந்து தரையில் அமர்ந்தபடி, கைகளில் வாசகங்கள் எழுதிய அட்டைகளை ஏந்தியபடி தங்களது எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றனர்.

இது குறித்து மருத்துவர்கள், போராட்டத்தில் ஈடுபடுவதற்கு முன் நாங்கள் மேயரிடம் சம்பள விவகாரம் பற்றி முறையிட்டோம். ஆனால் அதற்கு அவர் வடக்கு டெல்லி மாநகராட்சியில் பணம் இல்லை என கூறி விட்டார். 

எனவே எங்களுக்கு கடந்த 4 மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை என கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.