நியுசிலாந்து நாட்டில் இனி புகை பிடிக்க முடியாது: அப்படி ஒரு பிளான் பன்றாங்க!

18 April 2021

நியூசிலாந்து நாட்டில் புகையிலை இல்லாத தலைமுறை உருவாக்க வரும் 2025-ம் ஆண்டுக்குள் சிகரெட் பயன்பாட்டை தடை செய்யும் திட்டத்தை உருவாக்கியுள்ளது


இந்த திட்டத்தின்படி முதற் கட்டமாக சிகரெட் புகைக்கும் வயது வரம்பை அதிகரிப்பது, அதேபோல் 2004-ம் ஆண்டு பிறகு பிறந்தவர்களுக்கு புகையிலை பொருட்கள் விற்பனைச் செய்யத் தடை செய்யப்பட்டுள்ளது. இதன்காரணமாக புகைபிடிப்பது சட்ட விரோத நடவடிக்கை என வரும் தலைமுறையினர் உணர்வார்கள்.


புகையிலை பொருட்களில் அனுமதிக்கப்பட்ட நிகோடின் அளவை கணிசமாகக் குறைத்தால், புகையிலைக்கு குறைந்தபட்ச விலையை நிர்ணயித்தல் மற்றும் புகையிலை மற்றும் சிகரெட்டுகளை விற்கக்கூடிய இடங்களைக் கட்டுப்படுத்துதல் ஆகியவை இந்த திட்டத்தில் பரிசீலிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பேசிய அந்நாட்டின் சுகாதார அமைச்சர் ஆயிஷா வெரால், ஒவ்வொரு ஆண்டும் நியூசிலாந்து நாட்டில் 4,500 பேர் புகையிலை புகைப்பதினால் உருவாகும் நோயால் இறக்கிறார்கள். அடுத்த தலைமுறையினரைப் புகையில்லா தலைமுறையாக மாற்ற புதிய அணுகுமுறைகள் தேவைப்படுகிறது” என்றார்.

நியூசிலாந்தில் புகையிலை பொருட்களைத் தடை செய்ய பல ஆண்டுகளாகப் போராடி வரும் ‘Shane Kawenata Bradbrook’ இந்த திட்டம் குறித்து கூறுகையில், "சிகரெட் நிறுவனங்கள் தங்களுடைய லாபத்திற்காக நாட்டு மக்களின் உயிரை எடுத்துவந்தனர். சிகரெட் புகை பழக்கத்தினால் மக்களை அடிமைப்படுத்தி வந்தனர். தற்போது அரசு எடுத்துள்ள இந்த முடிவு புகையிலை நிறுவனங்களுக்கு முடிவுகட்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.