தேசிய முற்போக்கு திராவிட கழகம் ஆலோசனை கூட்டம்!

19 January 2021

தேசிய முற்போக்கு திராவிட கழகம் ஆலோசனை கூட்டம்!

தேசிய முற்போக்கு திராவிட கழகம் மேற்கு /திருவரம்பூர்/ கிழக்கு சட்டமன்றதொகுதி பொறுப்பாளர்கள். மற்றும் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது இக்கூட்டத்திற்கு திருச்சி மாநகர மாவட்டக் கழகச் செயலாளர் டி .வி. கணேஷ், தலைமை தாங்கினார் மாநகர மாவட்ட அவைத்தலைர்.  எஸ். அலங்கராஜ் ,மாநகர் மாவட்ட பொருளாளர் கே மில்டன் குமார், மாநகர மாவட்ட துணைச்செயலாளர். எஸ். ஆர். குமாரசரவணன், ஆகியோர் முன்னிலை வகித்தனர் மலைக்கோட்டை பகுதி செயலாளர் எம். நூர்முஹம்மது, வரவேற்புரையாற்றினார் மாநில கழக துணைச் செயலாளர் எஸ் சந்திர கழகப் பணி குழு செயலாளர் தாமோதர கண்ணன் மாநில மாணவர் அணி துணைச் செயலாளர் ஆர் விஷ்ணு பிரசாத் ஆகியோர் சிறப்புரையாற்றினர் கூட்டத்தில் வருகின்ற தேர்தலில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் வெற்றி பெற நகர்புற கிராமப்புறங்களில் உள்ள தொண்டர்கள் பாடுபட வேண்டும் கட்சியின் கொள்கைகளை எடுத்துக் கூற வேண்டும் கட்சியின் தலைவர் எப்பொழுதும் தொண்டர்கள் உணர்வை புரிந்து கொள்ளக் கூடியவர் இது போன்ற தலைவரை  நாம் வெற்றி பெற  செய்ய வேண்டும் எனவே வருகின்ற சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற தொண்டர்கள் பாடுபட வேண்டும் எனவும் வலியுறுத்திக் கூறினார்கள் கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர். 

கொற்றவை செய்திகளுக்காக திருச்சி செய்தியாளர் ஹரிஹரன்