பாலின வன்முறை குறித்த விழிப்புணர்வு !

19 January 2021

பாலின வன்முறை குறித்த விழிப்புணர்வு ! 

திருச்சி தலைமை தபால் நிலையம் அருகே உள்ள தனியார் அரங்கில் சேவ் நிறுவனம் சார்பில் பாலின வன்முறை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது இதில  மாவட்ட குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு திருச்சி காவல் ஆய்வாளர் அசிம், தலைமை வகித்து சிறப்புரையாற்றினார் அதைத்தொடர்ந்து அனைத்து மகளிர் காவல் நிலையம் திருவரம்பூர் காவல் ஆய்வாளர் அமுதராணி ,நீட்ஸ் இயக்குனர் ஆர் மருதநாயகம்,சமூக நலத துனைபாதுகாப்பு அலுவலர் புலோராமார்கிரேட், ஆகியோர் சிறப்புரையாற்றினர். பெண்கள் மற்றும் குழந்தைகள் ஒருங்கிணைப்பாளர் (எஸ்பிபிடி) எம்.சீத்தாலெட்சுமி வரவேற்புரை ஆற்றினார் சேவ். நிறுவனம் முத்து, கருத்துரை வழங்கினார் இந்நிகழ்ச்சியில் பாலின வன்முறை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கலந்து கொண்டவர்களிடம் பாலின வன்முறை குறித்த கேள்விகள் கேட்டு அதற்கான விளக்கங்கள் அளிக்கப்பட்டது மேலும் பாலின வன்முறை குறித்த அரசியல் சாசன சட்டங்கள் குறித்த விளக்கங்கள் அளிக்கப்பட்டது நிகழ்ச்சியின் முடிவில் திட்டஒருங்கிணைப்பாளர். க.குணசேகரன் நன்றி உரை கூறினார். 

கொற்றவை செய்திகளுக்காக திருச்சி செய்தியாளர் ஹரிஹரன்