முஸ்லிம்களுக்கு தேர்தலில் போட்டியிட பா.ஜ.க.வில் சீட் கிடையாது; கர்நாடக மந்திரி பேட்டியால் பரபரப்பு

30 November 2020

கர்நாடகாவில் முதல் மந்திரி எடியூரப்பா தலைமையில் பா.ஜ.க. ஆட்சி செய்து வருகிறது.  அவரது அமைச்சரவையில் மந்திரியாக இருப்பவர் கே.எஸ். ஈஸ்வரப்பா. அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராவர்.

அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,

இந்துக்களில் உள்ள எந்தவொரு சமூக பிரிவினருக்கும் தேர்தலில் போட்டியிட நாங்கள் தொகுதி வழங்குவோம். அவர் லிங்காயத் பிரிவை சேர்ந்தவராக இருப்பினும், குருபர், ஒக்கலிகர் பிரிவினராக இருப்பினும் அல்லது பிராமணராக இருப்பினும் எங்களுடைய கட்சியில் இருந்து தேர்தலில் போட்டியிடுவதற்கு தொகுதி வழங்கப்படும்.  ஆனால் முஸ்லிம்களுக்கு தேர்தலில் போட்டியிட தொகுதி வழங்கப்படாது என கூறியுள்ளார்.