அதிமுக மேற்கு இளைஞர் மற்றும் பெண்கள் பாசறை சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம்

25 October 2020

மதுரை மாநகர் மாவட்டம் அதிமுக மேற்கு இளைஞர் மற்றும் பெண்கள் பாசறை சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் கூட்டுறவு துரை அமைச்சர் செல்லூர் ராஜு தலைமையில் மதுரை ஜெய்ஹிந்த்புரம் தனியார் திருமண மண்டலத்தில் நடைபெற்றது..

விழாவில் பேசிய பேசிய அமைச்சர் செல்லூர் ராஜு, அதிமுகவிற்கு புதிய எழுச்சியை உருவாக்கி உள்ள இளைஞர் பாசறை உறுப்பினர் சேர்க்கையில் நிகழ்ச்சி அமைந்துள்ளது,

எம்ஜிஆர் உருவாக்கிய அதிமுக நாற்பத்தி ஒன்பதாம் ஆண்டு பொன் விழா காண இருக்கிறது அதிமுகவை கேலி பேசியவர்கள் உண்டு 50 நாள் அறுபது நாள் கட்சி முடிந்துவிடும் இவர்களால் ஒன்றும் சாதிக்க முடியாது அரசியல் கருத்துக்கள் கூறியவர்கள் மத்தியில் நம் கட்சி 48 ஆண்டு வெற்றிகரமாக கட்சி நடத்தி அதில் 31 ஆண்டு ஆட்சியிலிருந்த வரலாற்று பெற்ற கட்சி அதிமுக,

17 லட்சம் தொண்டர்கள் இருந்த இயக்கம் எம்ஜிஆர் மறைவிற்கு பிறகு ஜெயலலிதா காலத்தில் பல்வேறு அணிகள் உருவாக்கப்பட்டது, அம்மா பேரவை பாசறை தொழில்நுட்ப பிரிவு என பல பிரிவுகள் உருவாக்கி அதிக அளவில் இளைஞர்களை இயக்கத்தில் இழுத்து தற்போது ஒன்றரை கோடி தொண்டர்கள் உள்ள இயக்கமாக இருக்கிறது,

அதிமுக தேர்தல் பெட்டி வைத்து ஓட்டு போட்ட காலத்திலிருந்து ஆண்களைக் காட்டிலும் பெண்கள் வாக்கு அதிக அளவில் அதிமுகவிற்கு இருக்கும், இதனை கண்டு திமுக மிரண்டு போனார்கள், அதிமுக திட்டங்கள் அனைத்தும் பெண்களுக்கு சாதகமாக உள்ளது,


திமுக காலத்தில் முதியவர்களுக்கு 500 ரூபாய் மாதம் வழங்கினர் ஆனால் தற்போது அதிமுக அரசு ஆயிரம் ரூபாய் வழங்கி வருகிறது,


ஆண்கள் மட்டும் ஆதிக்கம் செலுத்திய அரசியலில் பெண்களும் சாதிக்க முடியும் என்று சாதித்துக் காட்டியவர் ஜெயலலிதா,

அடுத்த தேர்தலில் திமுக ஆட்சி பிடிக்குமா பிடிக்காதா என்று ஸ்டாலின் ஏங்கி கொண்டிருக்கிறார்,

யூடியூப், ஃபேஸ் புக்,ட்விட்டர் மூலம் ஏதாவது செய்தியை பரப்பி அரசுக்கும் கட்சிக்கு அவப்பெயர் விளைவிக்கும் வகையில் சிந்தித்துக் கொண்டிருக்கிறார் ஸ்டாலின்,

அரியர்ஸ் மாணவர்கள் பாஸ் என்று துணிச்சல் முடிவை எடுத்தவர் நம் முதல்வர்,மாணவர்கள் பாதிக்கக்கூடாது என்பதற்காக பத்தாம் வகுப்பில் அனைவரும் பார் என்று அறிவித்தவர் முதல்வர்,

ஐந்து முறை ஆட்சியில் இருந்த திமுகவால் மதுரைக்கு ஒரு வளர்ச்சியும் இல்லை, தற்போது அதிமுக ஆட்சியில் மதுரையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது,

மதுரையில் வெகுவிரைவில் 24 மணி நேரமும் குடிநீர் திட்டம் சத்தமில்லாமல் அதிமுக அரசு சாதனை செய்து வருகிறது,
லண்டனில் இருக்கும் நதியைப் போல் மதுரை வைகை நதி மாற உள்ளது,

மதுரையில் போக்குவரத்து நெரிசல் எதிர்காலத்தில் இருக்காது,

இளைஞர்களின் கொள்கைப் பிடிப்போடு விசுவாசத்துடனும் செயல்பட வேண்டும், அப்துல் கலாம் சொன்னது போல் அதிமுகவில் முதல்வராக வேண்டும் என்று கனவு காணுங்கள் நீங்களும் அதிமுக ஆட்சியில் முதல்வராக வாய்ப்பு இருக்கிறது,

ஸ்டாலினுக்கு மக்கள் செல்வாக்கு எங்கே உள்ளது கலைஞரின் மகன் என்ற அந்தஸ்தை விட வேற ஒண்டும் இல்லை அவர் ஒரு சைபர்,

நமக்கு நாமே என்று சொல்லி ஸ்டாலின் பல்வேறு வேஷம் போட்டுக் கொண்டுள்ளார் வடிவேலு கூறுவதுபோல் இதெல்லாம் நமக்கு தேவையா என்று கேலியாகப் பேசினார்,

மின்சாரக் கம்பிகள் துணி காய போட்ட காலம் திமுக காலம், திமுக ஒரு ரவுடி கட்சி அதுபோல அரசியல் கட்சி இருக்கவே கூடாது, அதை அழிக்கும் வரை அண்ணா திமுக ஓயவே ஓயாது அதனை அளிக்கும் சக்தி இளைஞர்கள் நீங்கள்தான்,

2021 திமுக கதை முடியப் போகிறது, என்று பேசினார்...