மார்க்கண்டயே நதியில் மீண்டும் வெள்ள பெருக்கு

20 June 2022

மார்க்கண்டயே நதியில் மீண்டும் வெள்ள பெருக்கு.... கரையேற மக்கள் பாதுகாப்பாக இருக்க எச்சரிக்கை.

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனபள்ளி அருகே உள்ள இரு மாநில எல்லையில் இருந்து உருவாகி தீர்த்தம், சின்ன்கொத்தூர் நாச்சிக்குப்பம்,குப்பச்சிப்பாறை வழியாக சென்று தென்பெண்ணையாற்றில் கலக்கிறது.கடந்த ஆண்டு பெய்த மழையால் பத்து ஆண்டுகள் கழித்து வெள்ள பெருக்கு ஏற்பட்டது. தற்போது மீண்டும் ஆந்திரா, கர்நாடக மாநில எல்லையில் பெய்து வரும் கண மழை காரணமாக  வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது.இதனை அறிந்த அப்பகுதி சிறுவர்கள் ஆபத்தை உணராமல் குப்பச்சிப்பாறை அருகில் உள்ள தடுப்பணை ஆற்றில் இறங்கி குளித்து வருகின்றனர். எனவே மாவட்ட பொது பணித்துறை அதிகாரிகள் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி ஆற்றின் உள்ளே செல்லாம்மல் இருக்க பாதுகாப்பு அரண் அமைக்க கோரிக்கை வைக்கின்றனர். வே

செய்தியாளர்:
மகேந்திரன்.