கொரோனா விஷயத்தில் மோடி அரசு தேல்வி: மாநிலங்களவையில் எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே

20 July 2021


கொரோனா விஷயத்தில் மத்திய அரசு தோல்வி அடைந்து விட்டது என  மாநிலங்களவையில் எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே குற்றஞ்சாட்டியுள்ளார்.

தனி மனித பொருளாதாரத்தை உயர்த்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என எத்தனையோ முறை காங்கிரஸ் வலியுறுத்தியது ஆனால் அதை கண்டுகொள்ளாமல் மத்திய அரசு செயல்படுகிறது என மாநிலங்களவையில் எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே விமர்சனம் செய்தார். 


இன்றுவரை கொரோனாவால் மக்கள் உயிரிழந்து கொண்டு தான் உள்ளார்கள், எந்த மருத்துவ வசதியும் இல்லாத இடத்தில் நாம் எப்படி வெற்றி கண்டோம் என கூறுகிறீர்கள் என்று மாநிலங்களவையில் எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே கேள்வி
எழுப்பினார்.