காலம் கனியட்டும்

01 April 2021

* விதைப்பதற்கு ஒரு காலமும், விளைச்சலை பறிப்பதற்கு ஒரு காலமும் உண்டு.
* சோதனையை சகிக்கும் மனிதன் பாக்கியவான்; ஏனெனில் சோதனை முடிவில் வாழ்வின் கிரீடத்தைப் பெறுவான்.
* பிறர் பார்க்க வேண்டும் என்பதற்காக ஜெபத்தில் ஈடுபடுபவர்கள் வேஷதாரிகள்.
* சோம்பேறியே...எறும்பின் உழைப்பைக் கவனி. அதற்கு வழிகாட்ட தலைவனும் இல்லை; அதிகாரியும் இல்லை.
* கருணையும் சத்தியமும் ஒன்றையொன்று சந்திக்கும். நேர்மையும் அமைதியும் ஒன்றையொன்று முத்தமிடும்.