கலைஞர் கருணாநிதி அவர்களின் உதவியாளருக்கு மனிதநேய பெருஞ்சுடர் விருது

18 February 2021

முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களின் உதவியாளருக்கு மனிதநேய பெருஞ்சுடர் விருது 

செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் அடுத்த குரோம்பேட்டையில் 
கொரோனா ஊரடங்கு காலத்தில் வறுமையில் வாடிய ஏழை எளிய மக்களை தேடி சென்று இந்நாள் வரை சென்னையை சுற்றியுள்ள விளிம்பு நிலை மக்கள்  பல ஆயிரக்கணக்கான பேருக்கு  உதவிகளை  செய்து வரும் மறைந்த திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான டாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்களின் உதவியாளர் நித்யாநந்தம்  அவர்களுக்கு சித்தார்த்தா சோஷியல் வெல்ஃபர் பவுண்டேஷன் சார்பில் மனிதநேய பெருஞ்சுடர் என்ற விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.இதில் அறக்கட்டளையின் நிருவனர் ராஜ்கமல் ,சமூக சேவகர் பம்மல் வினோத்  ஆகியோர் விருது வழங்கினார்.இதில் சமூக ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.