உங்கள் கையில் எப்போதும் இந்த 1 பொருள் இருந்தால் போதும். தேவையற்ற மன பயம் நீங்கும்.

08 September 2021

நம்முடைய அன்றாட வாழ்க்கைக்கு பயன் தரக்கூடிய ஆன்மீக ரீதியான சில நல்ல தகவல்களை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இந்தப்பதிவில் கொடுக்கப்பட்டிருக்கும் சின்ன சின்ன ஆன்மீக குறிப்புகளை நம்பிக்கையோடு முயற்சி செய்து பாருங்கள். நிச்சயமாக வாழ்க்கையில் நீங்களே எதிர்பார்க்காத பல நல்ல மாற்றங்களை பெறுவீர்கள். குறிப்புக்கு செல்வோமா.முதல் குறிப்பு: சிலபேர் எப்போதுமே பயந்த சுபாவத்துடன் இருப்பார்கள். சத்தமாக பேச மாட்டார்கள். வெளியில் சென்று சக மனிதர்களுடன் பேசி பழக மாட்டார்கள். இதைத் தொட்டால் பயம் அதை தொட்டால் பயம் என்று வீட்டிற்குள்ளேயே முடங்கி நடுங்கிக் கொண்டே இருப்பார்கள். இன்னும் சில பேர் தேவையில்லாத கற்பனையை தங்களுடைய மனதிற்குள் எதிர்மறையாக வளர்த்துக்கொண்டு, மனநிம்மதி இல்லாமல் தவித்து வருவார்கள்.நான்காவது குறிப்பு: இன்றைய சூழ்நிலையில் வாகனங்களில் விபத்து ஏற்படாமல் பயணம் செய்வது என்பது மிக மிகக் கடினமான விஷயம் என்று ஆகிவிட்டது. எங்கு பார்த்தாலும் விபத்து. நீங்கள் வாகனம் ஓட்டுபவர்கள் ஆக இருந்தாலும் சரி, வாகனத்தில் அடிக்கடி செல்பவர்களாக இருந்தாலும் சரி, வீட்டிலிருந்து கிளம்பும்போது ஒரு காகித பூவை எடுத்து உங்களுடைய பாக்கெட்டிலோ, பர்சிலோ வைத்துக் கொண்டு செல்ல வேண்டும்.இதோடு சேர்த்து காக்கும் கடவுளான முருகப் பெருமானை மனதார நினைத்து ‘வேலும் மயிலும் துணை’ என்ற வார்த்தையை உச்சரித்து வீட்டிலிருந்து கிளம்பினால் விபத்துகளில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.