ஐ.என்.எஸ் மீடியா வழக்கு, தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

28 August 2021

ஐ.என்.எஸ் மீடியா வழக்கில் சி.பி.ஐ தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் டெல்லி உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்தில் மேற்கொள்ளப்பட்ட அந்நிய முதலீட்டில் முறைகேடு நடந்ததாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டோருக்கு எதிராக சி.பி.ஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. இவ்வழக்கு தொடர்பான ஆவணங்களை குற்றஞ்சாட்டப்பட்ட தரப்புக்கு அளிக்க சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் இதை எதிர்த்து சிபிஐ மேல்முறையீடு செய்துள்ளது.
அதே நேரத்தில் இத்தகைய ஆவணங்களை சரிபார்ப்பது என்பது குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு உள்ள உரிமை என்றும் அதை மறுக்க யாருக்கும் அதிகாரம் கிடையாது எனவும் சிதம்பரம் தரப்பு வாதங்களை முன்வைத்தது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் இந்த வழக்கின் மீதான தீர்ப்பை டெல்லி உயர்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தது.