ஆனந்தாஸ் குழும ஹோட்டல்களில் வருமான வரித்துறையினர் 2-வது நாளாக சோதனை

29 May 2022

கோவையில் உள்ள ஆனந்தாஸ் குழும ஹோட்டல்களில் வருமான வரித்துறையினர் இரண்டாவது நாளாக அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.கோவையில் பிரபலமான ஆனந்தாஸ் ஹோட்டல் குழுமங்களுக்கு சொந்தமான ஆர்எஸ் புரம், லட்சுமி மில், வடவள்ளி, காந்திபுரம் உள்ளிட்ட பகுதியில் உள்ள ஓட்டல்களில் வருமான வரித்துறையினர் நேற்று காலை முதல் சோதனை செய்து வருகின்றனர். வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததன் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்படுவதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கோவை புறநகர் பகுதிகளில் சொத்துக்கள் வாங்கியதாக கூறப்படுகிறது.


கோவையில் ஆனந்தாஸ் உணவகத்திற்கு சொந்தமான சுமார் 25 இடங்களில் காலை முதல் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வந்தனர். 8 உணவகங்கள், ஐந்து வீடுகள், மற்றும் உணவக உரிமையாளரின் நெருங்கிய உறவினர் உள்ளிட்ட வீடுகளில் சோதனையானது நடைபெற்றது.மொத்தம் 25 இடங்களில் 20 இடங்களில் சோதனையானது முடிவு பெற்றுள்ளது. ஐந்து இடங்களில் இன்றும் சோதனை தொடர உள்ளது. இன்று மாலைக்குள் சோதனை முடியும் என கூறப்பட்டுள்ளது. அதிகாரிகள் உணவகங்கள் மற்றும் உரிமையாளர்களின் வங்கிக் கணக்குகள் தொடர்பான விவரங்களை சேகரித்து வைத்துள்ளனர்.அவற்றை தொடர்ந்து சோதனைக்கு உட்படுத்தி வருவதாக கூறியுள்ளனர். இருப்பினும் உணவகங்களில் வழக்கம் போல இயக்கிக் கொள்ள அதிகாரிகள் தரப்பில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


வடவள்ளி, லட்சுமி மில் உள்ளிட்ட கிளை உணவகங்களில் (ஆனந்தாஸ் உணவகம் ) ஐ டி ரெயிடு தொடர்ந்து வருகிறது. வருமான வரித்துறை அதிகாரிகள் இரண்டாவது நாளாக 5 இடங்களில் மட்டும் ரெயிடு. நேற்று காலை ஆரம்பித்த ரெயிடு மாலை வரை நீடித்து ஆனந்தாஸ் உணவகம் , இனிப்பகம், வீடுகள் என மொத்தமாக இருவதுக்கும் மேற்ப்பட்ட இடங்களில் நடந்தது முடிந்தது.