மிழக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் உள்ள தடுப்பூசி மையத்தில் முதல் கட்ட கொரைனா தடுப்பூசியை செலுத்தி கொண்டார்.
அவருக்கு Covaxin தடுப்பூசி செலுத்தப்பட்டது.தடுப்பூசி எடுத்துக் கொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறுகையில் "கொரைனா முதல் அலையில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு கொரைனா பரவலை தடுத்தது , தற்போது 2 ஆம் ஆலை வந்துள்ளது.இதிலிருந்து மக்களை காக்க அரசு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
பொது மக்கள் கொரைனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் . மதுரை மாவட்டத்தில் அரசு இராஜாஜி மருத்துவமனையில் 25 ஆயிரத்து 046 பேரும் , தனியார் மருத்துவமனைகளில் 1 லட்சத்து 39 ஆயிரத்து 525 பேரும் தடுப்பூசி எடுத்துக்கொண்டனர்" என கூறினார்.