தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே அமைந்துள்ள மேல்மங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்தில், இன்று காலை மூலிகை தோட்டம் அமைக்கப்பட்டது.
மேல்மங்கலம் ஊராட்சி மன்றத் தலைவர் திரு.நாகராஜ், மூலிகைத் தோட்டம் அமைக்கப்படும் இடத்தினை சீர்செய்து, மூலிகைச் செடிகளை வாங்கிக்கொடுத்தார்.மாவட்ட சித்தமருத்துவ அலுவலர் ஆலோசனையின் பேரில், மேல்மங்கலம் ஆரம்ப சுகாதார நிலைய ஆயுர்வேத மருத்துவர் டாக்டர். ப்ரீத்தா நிலா அவர்கள் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.
வட்டார மருத்துவ அலுவலர் கோமதி, மேல்மங்கலம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் குணவதி, சுகாதார ஆய்வாளர் ரங்கராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர். பல்வேறு மூலிகைச் செடிகள் நடப்பட்டது. மேல்மங்கலம் ஊராட்சிமன்ற தலைவர் மற்றும் நிர்வாகத்திற்கு ஆரம்பசுகாதார நிலையத்தினர் நன்றி தெரிவித்தனர்.