வந்தவாசி மகளிர் கல்லூரியில் தேர்தல் விழிப்புணர்வு மற்றும் மகளிர் தின விழா - மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு..

08 March 2021

திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் மற்றும் வந்தவாசி ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி மகளிர் கல்லூரி இணைந்து நடத்திய தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் சர்வதேச மகளிர் தின விழாவில் சிறப்பு அழைப்பாளராக, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் திருமிகு.

சந்தீப் நந்தூரி அவர்கள் பங்கேற்று, பெண்களின் சாதனைகள், அவர்கள் அடையும் இலக்குகள், தனித் திறன்கள் போன்றவற்றை முழுமையாக வெளிக்கொணர வேண்டும் என்று பேசினார்.

மேலும் வாக்காளர் தின கையெழுத்து இயக்கம், மாதிரி வாக்கு இயந்திரங்கள் செயல்முறை விளக்கம் போன்றவையும் மாணவிகளுக்கு விளக்கினார். இந்த நிகழ்வில் வந்தவாசி வட்டாட்சியர் திருநாவுக்கரசு, தேர்தல் பிரிவு வட்டாட்சியர் அகத்தீஸ்வரன், துணை ஆட்சியர் அஜிதா பேகம், கல்லூரி நிறுவனர் பா. முனிரத்தினம், அரிமா வி.எல். தளபதி உள்ளிட்டோர் பங்கேற்றனர். கல்லூரி மாணவிகளின் நடனம், சிலம்பாட்டம்,  தேர்தல் விழிப்புணர்வு நாடகம் போன்றவைகள் நடைபெற்றது.