கால நிலை மாற்றத்தால் ஜிடிபி பாதிக்ககூடும்.கனிமொழி எம்பி

01 September 2021

காலநிலை மாற்றத்தால் நாட்டின் உள்நாட்டு மொத்த உற்பத்தி பாதிக்கக் கூடும் என்பதால், மத்திய அரசு தனி கவனம் செலுத்த வேண்டும் என திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி வலியுறுத்தி உள்ளார்.

காலநிலை மாற்றங்கள் தொடர்பான பன்னாட்டு குழுவின் அறிக்கை குறித்த விவாதம் பூவுலகின் நண்பர்கள் சார்பில் சென்னை பெரியமேட்டில் நடைபெற்றது. இதில் திமுக எம்.பி. கனிமொழி, விசிக தலைவர் திருமாவளவன், மனித நேயமக்கள் கட்சியின் ஜவாஹிருல்லா, தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி, தற்போது உள்ள காலநிலை மாற்றம் என்பதை நாம் சாதாரணமாக கடந்துபோக கூடிய நிலையில் இல்லை என்றார். தொடர்ந்து பேசிய திருமாவளவன், சுற்றுச்சூழல் தொடர்பான பாடத்தை பள்ளி பாடதிட்டத்திலேயே கொண்டு வர வேண்டியது அவசியம் என்றார்.