பசித்தவருக்கு உணவிடுங்கள்

04 April 2021

* பசி என வந்தவருக்கு உணவு அளிப்பதே சிறந்த பண்பு.
* அச்சத்தை அகற்றாவிட்டால் அடிமையாக வாழ வேண்டியிருக்கும்.
* கொடுக்கின்ற மனம் இல்லாவிட்டாலும், பிறர் கொடுப்பதைத் தடுக்காதீர்.
* கோபத்தால் நொடிப் பொழுதில் நண்பர்களும் பகையாவர்.
* தவறுக்காக மன்னிப்பு கேட்பதன் மூலம் மனம் துாய்மை பெறும்.
* பேராசை கொண்டவனுக்கு உலகையே கொடுத்தாலும் திருப்தி ஏற்படாது.
* பொய் மனிதனை பழிக்கு ஆளாக்கும். உண்மையோ புகழுடன் வாழ வைக்கும்.
* விவேகம் என்னும் நல்லறிவு யாருக்கும் எளிதில் உண்டாகாது.
* தன்னம்பிக்கை இல்லாதவனால் புதிய முயற்சியில் ஈடுபட முடியாது.
* போதும் என்ற மனம் இருந்தால் பிறர் நலனில் அக்கறை உண்டாகும்.
* கூட்டு முயற்சியால் கிடைத்ததை கூட்டாளிக்கும் பகிர்ந்து கொடுங்கள்.
* தேவைக்கு மேல் பணம் இருந்தால் தேவையுள்ளவனுக்கு கொடுங்கள்.
* மனிதனின் விருப்பம் போல வாழ்நாளை நீடிக்க முடியாது.
* குறுகிய எல்லை கொண்ட வாழ்வில் முடிந்த நல்லதைச் செய்யுங்கள்
.நல்வழிப்படுத்துகிறார் மகாவீரர்