ஊழலுக்கு எதிராக அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று பிரதமர் நரேந்திரமோடி வலியுறுத்தி இருக்கிறார்.
கண்காணிப்பு மற்றும் ஊழல் தடுப்பு மாநாட்டில் காணொலி காட்சி மூலம் பங்கேற்றுப் பேசிய அவர், ஊழல், பொருளதார குற்றங்கள், பயங்கரவாதம் மற்றும் அதற்கான நிதி, பண மோசடி அனைத்தும் ஒன்றொடொன்று தொடர்புடையவை என்றார்.
பல மாநிலங்களில் தலைமுறை தலைமுறையாக நடந்த ஊழல் நாட்டையே வெறுமையாக்கி இருந்ததாக அவர் குறிப்பிட்டார். தற்போது ஊழல்களின் சகாப்தம் முடிந்து விட்டது என்று கூறிய பிரதமர், ஏழை பயனாளிகளின் வங்கி கணக்கில் நேரடியாக பணம் செலுத்தப்படுவதால், ஒரு லட்சத்து 70 ஆயிரம் கோடி ரூபாய் சேமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.