திருவிழா 15 நாட்கள் அனுமதி தரகோரி சப் கலெக்டரிடம் இந்து முன்னணியினர் மனு!

05 March 2021

தாராபுரம் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவில் 


திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவில் திருவிழா பல ஆண்டுகளாக பாரம்பரிய மரபுப்படி நடைபெற்று வந்த நிலையில் கடந்த ஆண்டு கொரோனா தொற்று பரவல் காரணமாக ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் தற்பொழுது கொரோனா தொற்று பெருமளவு குறைந்துள்ள நிலையில், தேர்தல் அறிவிக்கப்பட்டு பிரச்சாரத்துக்காக தாராபுரத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல், திமுக தலைவர் ஸ்டாலின், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர்கள் கலந்து கொண்ட பிரச்சார கூட்டங்களில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றது தாங்கள் அறிந்ததே. இந்நிலையில் தாராபுரம் ஸ்ரீ மாரியம்மன் திருவிழாவை கட்டளைதாரர்களும், பொது மக்களும் விதிமுறைகளை பின்பற்றி பாரம்பரிய மரபுப்படி கம்பத்திவ் பூவோடு வைத்து திருவிழாவை கொண்டாட அனுமதி வழங்குமாறு கோரிக்கை மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.