தமிழ்நாட்டிற்கு இதுவரை மத்திய தொகுப்பில் இருந்தும் தமிழ்நாடு அரசு நேரடியாக கொள்முதல் செய்தும் 1 கோடியே 92 லட்சம் கோவிஷீல்டு மற்றும் கோவக்சின் தடுப்பூசிகள் வந்துள்ளன.
இதுவரை சுமார் 1 கோடியே 86 லட்சம் பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். புனேவில் இருந்து விமானத்தில் வந்த 12 பெட்டிகளில் 1 லட்சத்து 44 ஆயிரம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் வந்தன. இவை தேனாம்பேட்டையில் உள்ள மாநில சுகாதார கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டது.
அதே விமானத்தில் 28 பெட்டிகளில் 3 லட்சத்து 36 ஆயிரம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் மத்திய தொகுப்பிற்காக பெரியமேட்டில் உள்ள மத்திய கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டது. தடுப்பூசிகள் தேவைப்படும் மாவட்டங்களுக்கு உடனே பிரித்து அனுப்பி வைக்கப்படும் என அதிகாரிகள் தகவல்.
மேலும்,தமிழகத்திற்கு இன்று மாலை 4.81 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் சென்னை வரவுள்ளன.