திருவண்ணாமலை மாவட்டம், அம்மையப்பட்டு கிராமத்தில் கொரோனா தடுப்பூசி முகாம்!
16 April 2021
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த அம்மையப்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. ஏராளமான பொதுமக்கள் இந்நிகழ்வில் பங்கேற்றனர். மேலும் பொதுமக்களுக்கு முகக் கவசம், கபசுர குடிநீர் ஆகியவைகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் ஊராட்சி மன்ற தலைவர் சாந்திரமேஷ்,
துணைத் தலைவர் ராமு, ஊராட்சி மன்ற பெருந்தலைவர்
டாக்டர். ஜெயமணி ஆறுமுகம், எம்.கே.ஏ.
லோகேஸ்வரன், வட்டார வளர்ச்சி அலுவலர் மயில்வாகனன், செந்தில்குமாரி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேஸ்வரி, வழூர் வட்டார மருத்துவ அலுவலர் திருமூர்த்தி, டாக்டர் அக்மல், கிராம நிர்வாக அலுவலர் தண்டபாணி,கிராம உதவியாளர் மு.பிரபாகரன் ஆகியோர் கலந்துகொண்டனர். நிகழ்வில் மனோஜ், ராகுல் குழுவினரின் *கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி* நடைபெற்றது.