வந்தவாசியில் கொரோனா 2ம் அலைப்பரவலை கட்டுபடுத்த அன்பால் அறம் செய்வோம் பொதுசேவை குழு சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

10 May 2021

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியில் கொரோனா 2ம் அலைப்பரவலை கட்டுபடுத்த அன்பால் அறம் செய்வோம் பொதுசேவை குழு சார்பில் கொரோனா நோய் தடுப்பு தற்காப்பில் நாம் செய்யும் தவறை சுட்டி காட்டி சரியான முறை என்னவென்று விளக்கி கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தி முக கவசம் மற்றும் கபசுர குடிநீர் வழங்கிய விழிப்புணர்வு நிகழ்வு குழு நிறுவனர் அசாருதீன் தலைமையில் நடைபெற்றது.

வந்தவாசி காய் கறி சந்தையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 

அன்பால் அறம் செய்வோம் பொது சேவை குழுவின் துணை தலைவர் வசீகரன் தொற்று வராமல் தடுக்க "இரட்டை முகக்கவசத்தின்" முக்கியத்துவத்தை எடுத்து கூறி பயன்படுத்தும் முறையை விளக்கி கூறினார். டாக்டர் கலாம் ட்ரீம் பவுண்டேஷன் நிறுவனர் சைகை மூலம் முகக்கவசம் காட்டி விளக்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.நிகழ்வில் 300க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு கப சுர குடிநீர் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில்,அன்பால் அறம் செய்வோம் செயளாலர் கதிர் பாஷா,வசீகரன்,மோகன்,ஜோதிபா,சுகி,செந்தமிழ்,கோபி,உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.