கொரோனா விழிப்புணர்வு போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசுகள்

11 May 2021


திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி டவுன் பெரிய காலணி பகுதியில் உள்ள சிகரம் பண்பாட்டு மையத்தில் கொரோனா விழிப்புணர்வு தொடர்பான ஓவியம், கட்டுரை உள்ளிட்ட போட்டிகளில் பங்கேற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வில் ஓவிய ஆசிரியர் பெ. பார்த்திபன், வந்தை வட்ட கோட்டை தமிழ்ச் சங்க செயலாளர் பா. சீனிவாசன், எக்ஸ்னோரா செயலாளர் கு. சதானந்தன், கிராம உதவியாளர் சங்க பொறுப்பாளர் மு. பிரபாகரன், பட்டதாரி ஆசிரியர் ரகுபாரதி ஆகியோர் பங்கேற்றனர்.