விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தீயணைப்பு துறை வாகனம் மூலம் நகர் முழுவதும் ஒட்டுமொத்த கிருமிநாசினி தெளிக்கும் பணி நடைபெற்றது..
11 May 2021
அருப்புக்கோட்டையில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது தொடர்ந்து அதிகரித்துவரும் கொரோனா பரவலை கட்டுபடுத்த சுகாதாரத்துறை அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர் இந்நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அருப்புக்கோட்டை நகராட்சி சார்பில் தீயணைப்பு துறை வாகனம் மூலம் நகர் முழுவதும் ஒட்டுமொத்த கிருமி நாசினி தெளிக்கும் பணி நடைபெற்றது பிற்பகல் வேளையில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்ட பின் நகராட்சி அலுவலகத்தில் இருந்து துவங்கிய
இந்த கிருமி நாசினி தெளிக்கும் பணியை நகராட்சி ஆணையாளர் துவக்கிவைத்தார் தொடர்ந்து மக்கள் அதிகம் கூடும் இடங்களான அரசு மருத்துவமனை வளாகம், பந்தல்குடி ரோடு, எம்எஸ் கார்னர் , அகமுடையார் மஹால் பஜார் உள்ளிட்ட நகர் முழுவதும் தீயணைப்பு துறை வீரர்கள் தீயணைப்பு வாகனத்தில் பொருத்தப்பட்ட அதிநவீன இயந்திரம் மூலம் கிருமிநாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டனர்