கும்பகோணம் மேலக்காவேரி பகுதியில் குழந்தை கடத்தல் முயற்சி !

24 June 2021

கும்பகோணம் மேலக்காவேரி பகுதியில் வசித்து வருபவர் பரக்கத் நிஷா,

நேற்று (23/06/2021) அவர் தனது 7வயது மகள் மற்றும் 6 வயது மகனுடன் நகராட்சி தொடக்கப் பள்ளிக்கு வந்தார்.

பொருட்கள் வாங்கிவிட்டு திரும்பும்போது 
ஆட்டோவில் வந்த மர்ம நபர் குழந்தைகளை கடத்த முயன்றுள்ளார்,

அப்போது பரக்கத் நிஷா கூச்சலிட்டதும் அவருடைய செல்போனை பிடிங்கிக் கொண்டு தப்பிச்சென்றார் ஆட்டோவில் வந்த மர்ம நபர், இதுகுறித்து கும்பகோணம் கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார் பரக்கத் நிஷா.

இந்த சம்பவத்தால் அந்த பகுதி பொதுமக்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளனர், குற்றவாளியை உடனடியாக கைது செய்து இது போன்ற அத்து மீறல்கள் நடக்காமல் பாதுகாக்க வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் கோரிக்கை.