சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கனமழை பெய்யும் - வானிலை மையம்

29 October 2020

சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வடகிழக்கு பருவமழை நேற்று தொடங்கிய நிலையில், அடுத்த 5 நாட்களுக்கு தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்தது. அந்த வகையில், சென்னையில் நேற்றிரவு முதல் அதிகாலை வரை தொடர்ந்து இடி, மின்னலுடன் கூடிய கனமழை கொட்டித்தீர்த்தது.

இதனால் பிரதான முக்கிய சாலைகளில் வெள்ளம் நீர் தேங்கியுள்ளதால் சாலைகள் கடல் போல் காட்சியளிக்கின்றன. 2017 நவம்பருக்கு பின் சென்னையில் நேற்று ஒரே நாளில் அதிகளவு கனமழை பெய்துள்ளதாக கூறப்படுகிறது.


இந்நிலையில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், ராணிப்பேட்டை, திருநெல்வேலி, தென்காசி, விருநகர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கனமழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை, வளிமண்டல சூழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் கனமழை தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.