தமிழ்நாட்டில் உள்ள நில அபகரிப்பு சிறப்பு நீதிமன்றங்கள் செயல்படுகின்றனவா?

26 September 2021

தமிழ்நாட்டில் உள்ள நில அபகரிப்பு சிறப்பு நீதிமன்றங்கள் செயல்படுகின்றனவா என்பது குறித்து பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற பதிவாளருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

 

 

நில அபகரிப்பு புகார்களை விசாரிப்பதற்காக தனி பிரிவை உருவாக்கிய தமிழ்நாடு அரசு, அதுகுறித்த வழக்குகளை விசாரிக்க 2011ஆம் ஆண்டில் சிறப்பு நீதிமன்றங்களை அமைத்தது. ஆனால், அதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு ஒன்றில், தமிழ்நாடு அரசின் உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. அந்த உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த நிலையில், நில அபகரிப்பு சிறப்பு பிரிவு மற்றும் சிறப்பு நீதிமன்றங்கள் உருவாக்கிய அரசின் உத்தரவுகள் அங்கீகரிக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து நில அபகரிப்பு நீதிமன்றங்கள் செயல்படவும் அனுமதி அளித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.