கோவளம் அருகே நீர்த் தேக்கம் அமைக்க மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்து, ஆலோசனை நடத்தினர். செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே இ.சி.ஆர்., மற்றும் ஓ.எம். ஆர்., சாலை இடையே பகிங்ஹாம் கால்வாய் உள்ளது. இங்கு இயற்கையாகவே மீன், நண்டு, இறால், கிளிஞ்சல்கள் வளர்கின்றன. இப்பகுதி மீனவர்கள், பகிங்ஹாம் கால்வாயில் மீன் பிடித்து வாழ்வாதாரத்தை நடத்துகின்றனர்.இந்நிலையில் கோவளத்தில், 471 கோடி ரூபாயில், 4,375 ஏக்கரில், சென்னையின் 6வது நீர்த் தேக்கம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருகிறது.இதற்கு, மீனவர்கள் தரப்பில் எதிர்ப்பு எழுந்து வருகிறது.இதுதொடர்பாக, பஞ்சாயத்து கூட்டம் நேற்று நடந்தது. இதில் மாமல்லபுரம் முதல் கானத்துர் வரை உள்ள மீனவ கிராமத்தை சார்ந்த மீனவர்களும் கலந்துகொண்டனர்.
செய்தியாளர் : அ. முகமது ஷாகோவளம் அருகே நீர்த் தேக்கம் அமைக்க மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்து, ஆலோசனை நடத்தினர். செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே இ.சி.ஆர்., மற்றும் ஓ.எம். ஆர்., சாலை இடையே பகிங்ஹாம் கால்வாய் உள்ளது. இங்கு இயற்கையாகவே மீன், நண்டு, இறால், கிளிஞ்சல்கள் வளர்கின்றன. இப்பகுதி மீனவர்கள், பகிங்ஹாம் கால்வாயில் மீன் பிடித்து வாழ்வாதாரத்தை நடத்துகின்றனர்.இந்நிலையில் கோவளத்தில், 471 கோடி ரூபாயில், 4,375 ஏக்கரில், சென்னையின் 6வது நீர்த் தேக்கம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருகிறது.இதற்கு, மீனவர்கள் தரப்பில் எதிர்ப்பு எழுந்து வருகிறது.இதுதொடர்பாக, பஞ்சாயத்து கூட்டம் நேற்று நடந்தது. இதில் மாமல்லபுரம் முதல் கானத்துர் வரை உள்ள மீனவ கிராமத்தை சார்ந்த மீனவர்களும் கலந்துகொண்டனர்.
செய்தியாளர் : அ. முகமது ஷா