மதுரை மாவட்டத்தில் நாளை பள்ளிக்கு விடுமுறையா

21 October 2025

மதுரை மாநகர் பகுதிகளான திருப்பரங்குன்றம், கோரிப்பாளையம், சிம்மக்கல்,தெப்பக்குளம், ரேஸ்கோர்ஸ் காலனி, டி.ஆர்.ஓ., காலனி, காமராஜர் சாலை, ஆரப்பாளையம், மாட்டுத்தாவணி உள்ளிட்ட மாநகர் பகுதிகளிலும் திருமங்கலம், மேலூர், சோழவந்தான், வாடிப்பட்டி உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.

அதிகாலையில்பிருந்தே பெய்து வரும் மழையின் காரணமாக சாலையில் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்று வாகன ஓட்டிகளுக்கு கடும் சிரமத்தை ஏற்படுத்தி உள்ளது. அதே போல வைகை அணையில் இருந்து திறந்து விடப்பட்ட நீர் என்பது மதுரை மாநகரின் வைகையாற்றின் இரு கரையும் புரண்டு ஓடுகிறது.

இந்தநிலையில், கனமழையை தொடர்ந்து மதுரையில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறையா? என்ற கேள்விக்கு மதுரை மாவட்ட கலெக்டர் பிரவீன் குமார் பதில் அளித்துள்ளார். அதில், காலை மழையின் அளவை பொறுத்து தான் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை குறித்து தெரிவிக்கப்படும் என்றார்.

Dr. R. Rajaganapathi
madurai usilampatti