தென்மேற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவி வருவதால் அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு வட மேற்கு திசை நோக்கி இந்த வளிமண்டல சுழற்சி நகரும் வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக காரைக்கால் பகுதிகளில் நாளை கனமழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அமைச்சர் நமச்சிவாயம் காரைக்காலில் பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவித்து உத்தரவிட்டுள்ளார்...